சித்தாவில் கருப்புக்கு ஆற்றல் அதிகம். கருந்துளசி, கருநெல்லி, கருஞ்சீரகம், கருநொச்சி என சில போற்றப்படுகின்றன. அந்த வகையில் கருமஞ்சளும் சிறந்த தீர்வு தருவதாகப் போற்றப்படுகிறது.
கருமஞ்சளில் வேதி எண்ணெய், மாவுச் சத்து, தாதுக்கள், கொழுப்பு, பசை, ரென்மின், ஜெர்மாக்ரின் கார்டியோன், ல்கலாய்ருகள், குர்குமின் மற்றும் டார்மின் நிறமிகள் நிறைந்துள்ளன.
இக்கிழங்கு பசியின்மையைப் போக்கி பசியைத் தூண்டுகிறது. நீரில் கொதிக்கவைத்து நீரைக்குடித்து வந்தால் நல்ல பசி யெடுக்கும் .
சொரி, சிரங்கு புண்கள்,படர்தாமரை போன்ற சரும கிருமிகளால் ஏற்படும் தோல் வியாதிகளையும் சரி செய்கிறது. நீரில் கொதிக்கவைத்து அந்த நீரை குடித்தால் தோல் வியாதிகள் குணமாகும்.
பெண்கள் கருமஞ்சளின் காய்ச்சிய நீரைக் குடித்தால் கருவில் உள்ள குழந்தை நல்ல வளர்ச்சியைக் காணும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி குணமாகும்.
பிரசவத்திற்குப் பிறகு ரத்தத்தில் கழிவுகள் இருக்கும் அதனை கருமஞ்சள் சரி செய்யும்.
இருமல், மூலம் குணமாகும். சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
கருமஞ்சளை மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.