அண்ணாமலைக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற டி.ஆர். பாலு! அமெரிக்க மக்களுக்காக பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டும் : அதிபர் டிரம்ப்தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை! தவெகவுக்கு துணை நிற்போம்! அதிமுக: திருமாவளவன் மேயர் பிரியா, அமைச்சர் சேகர் பாபு மீது வழக்குப் பதிவு!குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!பொறியியல் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு! கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும்!தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை!
/

சின்னச் சின்ன அழகுக் குறிப்புகள்...

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

News image
Updated On :11 பிப்ரவரி 2021, 3:47 pm IST

ஆமணக்கு எண்ணெய் தடவி வர புருவம் அடர்த்தியாக வளரும்.

*முளைக்கட்டிய கருப்பு கொண்டைக்கடலையை தினமும் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் தலைமுடி நன்கு வளரும்.

*தேங்காய்ப்பால் தடவி குளித்து வந்தால் நாளடைவில் செம்பட்டை முடி சரியாகும்.

*துளசி இலை சாற்றை முகப்பரு மேல் பூசி வந்தால் முகப்பரு மறையும்.

*பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வந்தால் முகம் பொலிவு பெறும்.

*பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகம் பளப்பளப்பாகும்.

*பாதாம் பருப்பு, பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி வந்தால் வறண்ட சருமம் மாறும்.

*பாசிப் பருப்பை தேங்காய்ப் பாலில் ஊறவைத்து அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியைச் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் முகம் மென்மையாகக் காணப்படும்.

*கொத்துமல்லி மற்றும் மஞ்சளை சேர்த்து அரைத்து விழுதாக்கி  முகத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

*ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு அரைத்து தடவி வந்தால் முகப்பரு மறையும். சருமம் பளபளப்பாகும்.

*பூந்திக் கொட்டையைக் தண்ணீரில் ஊற வைத்து அந்த நுரையைக் கொண்டு நகங்களை கழுவினால் நகங்கள் பளிச் சென்றும் சுத்தமாகவும் காணப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.