தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சிங்கப்பூரில் தமிழில் தடம் பதிக்கும் பெண்மணி!

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதால், எழுத்தாளர்களும் குறைந்துவிட்டார்கள் எனக் கூறலாம்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 11:22 am IST

புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதால், எழுத்தாளர்களும் குறைந்துவிட்டார்கள் எனக் கூறலாம். வாசிக்கும் பழக்கம் வாழ்க்கையை உயர்த்தும் என தற்போது எந்த பெற்றோரும் பிள்ளைகளுக்கு சொல்லித் தருவதில்லை என்பது வேதனையான விஷயம். இந்நிலையில் தென்காசியைச் சேர்ந்த பீரம்மாள் பீர்முகமது என்ற பெண்மணி, சிங்கப்பூரில் பல ஆண்டு காலமாக தமிழ் எழுத்தாளராக செயல்பட்டு வருகிறார். இது குறித்து பீரம்மாள் பீர்முகமது நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது: 

""நான் தென்காசியில் பிறந்து வளர்ந்து ஆரம்பக்கல்வி, உயர் கல்வி கற்று 1980-ஆம் ஆண்டு திருமணம் முடித்து சிங்கப்பூர் வந்தேன். எனது கணவர் பீர்முகமது சிங்கப்பூரில் உள்ள தனியார்  5 நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நானும் சிங்கப்பூரில் தனியார் அலுவலகத்தில் வரவேற்பாளராக பணிபுரிந்தேன். எனக்கு பள்ளியில் படிக்கும் போதே புத்தகங்களை படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின்னரும் ஓய்வு நேரத்தில் வரலாறு, நாவல், வெற்றியாளர்களின் கதை என பல தரப்பட்ட  புத்தகங்களை படிப்பேன். இதனால் எனக்கு தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது.  நான் எழுதிய முதல் சிறுகதை "கடமை'. சிங்கப்பூர்  தமிழ் முரசு பத்திரிகையில் 2000-ஆம் ஆண்டில் பிரசுரமானது.

இந்த கதை பிரசுரமானதும்  மேலும் எழுத வேண்டும் என எனக்குள் ஆர்வம் மிகுந்தது. சிங்கப்பூர் வானொலியில் உள்ள தமிழ் பிரிவில் , "ஒலி களஞ்சியம்' என்ற நிகழ்ச்சியில் நான் எழுதிய "வசந்தகாலம்' என்ற சிறுகதை வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பட்டிமன்ற பேச்சாளராகவும் செயல்பட்டேன். இதையடுத்து "பிரகாசம்' என்ற சிறுகதை தொகுப்பு, "வேதவாக்கு' என்ற சிறுகதை தொகுப்பு, "வெற்றி நிச்சயம்' என்ற சிறுவர் நாடகம், "புதிய பாதை' என்ற கவிதை தொகுப்பு ஆகிய நான்கு புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளேன்.

இந்த புத்தகங்களுக்கு சிங்கப்பூர் தமிழர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதுவரை 50 சிறுகதைகள், 35 நாடகங்கள், 50 கட்டுரைகள், 260 கவிதைகள் எழுதியுள்ளேன். சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் 4 ஆண்டுகள் செயலாளராகவும் பணி புரிந்துள்ளேன்.

என்னைப் போன்று  பெண்கள் பலரும் தங்களுக்குக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் கைபேசியிலும், டி.வி.யிலும் மூழ்கிவிடாமல் பயனுள்ள புத்தகங்களை படியுங்கள். எழுத முயற்சி செய்யுங்கள். அந்த முயற்தி உங்களுக்கு ஆர்வத்தையும் வெற்றியையும் கொடுக்கும். வாழ்க்கை உங்கள் வசப்படும்'' என்றார் பீரம்மாள் பீர்முகமது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.