ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

சின்ன சின்ன அழகுக் குறிப்புகள்!

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

News image
Updated On :7 ஜூலை 2021, 3:23 pm IST

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு தேக்கரண்டி பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாற, ஆலிவ் எண்ணெய்யுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். 

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர வெயிலினால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

முள்ளங்கி சாறு மற்றும்  மோர் தலா  இரண்டு தேக்கரண்டி எடுத்து கலந்து, முகத்தில் தடவி, ஒரு மணிநேரம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி வர,  முகத்தில் ஏற்படும் தவிட்டு நிறமுள்ள புள்ளிகள் மறையும்.

சின்னம்மையால் ஏற்பட்ட வடு மறைய, 6 மாதம் தொடர்ந்து தேங்காய் தண்ணீரை முகத்தில் தடவி வர வேண்டும்.

பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கி அதை கண்களை சுற்றி வைக்க கருவளையம் மறையும்.

புளித்த மோரை முகத்தில் 15 நிமிடம் தடவி, மிதமான சுடுநீரில் கழுவ முகம் பொலிவு பெறும். இதை தொடர்ந்து 15 நாள்களுக்கு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

முழங்கை (முட்டி) கருப்பாகவும், சொர சொரப்பாகவும் இருந்தால், தேங்காய் எண்ணெய்யுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வர மிருதுவாக மாறும்.

உலர்ந்த சருமம் உள்ளவர்கள் கிளிசரினுடன் ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் தடவலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.