ஆங்கில எழுத்தாளர் அனிதா நாயர் சமீபத்தில் எழுதியுள்ள மூன்று நாவல்களையும் ஆடியோ புக் வடிவில் கொண்டு வந்திருக்கிறார். நான்காவதாக இவர் தற்போது எழுதியிருக்கும் நூல் "ஏ ஃ பீல்டு ஆஃப் பிளவர்ஸ்'. இந்த நூலையும் ஆடியோ புக்காகத் தான் வெளியிடுகிறார். இந்தக் கதையை விவரித்துள்ளவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
ஆடியோ புக்காக - ஒலிச்சித்திரம் போல வெளியிடுவது ஏன்?
""நான் தமிழ் நன்றாகப் பேசுவேன். ஆனால் படிப்பதில் சிரமம் இருக்கிறது. கல்கியின் "பொன்னியின் செல்வன்' நாவலைப் படிக்க விரும்புகிறேன். ஆனால், படிக்கத் தெரியாததால் முடியவில்லை. அதே சமயம், ஆடியோ புத்தகமாக ஒலிசித்திரமாக வரும்போது அதன் குரலைக் கேட்டு கதையைப் புரிந்துகொள்ள முடியும். அதாவது குரல் வடிவில் கேட்டு புரிந்து கொள்ள முடியும். இது மாபெரும் உதவியாக இருக்கிறது'' என்கிறார் அனிதா நாயர்.