தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

போர் விமானத்தை இயக்கும் இளம் பைலட்!

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் முதல் போர் விமான பைலட் என்ற பெருமையை 24 வயது மாவ்யா சுதன்  பெற்றுள்ளார்.

News image
Updated On :28 ஜூலை 2021, 12:30 am

DIN

ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டத்தின் முதல் போர் விமான பைலட் என்ற பெருமையை 24 வயது மாவ்யா சுதன் பெற்றுள்ளார். லம்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாவ்யா, ரஜவுரி மாவட்டத்திலிருந்து விமானப்படையில் சேரும் 12 - ஆவது பெண் ஆவார். இந்திய போர் விமானத்தின் பைலட்டாக நியமிக்கப்பட்டதில் ரஜவுரி மாவட்டத்திலேயே முதல் பெண் இவர்தான். ஐதராபாத்தில் துண்டிகல் விமானப்படை அகாதெமியில் பயிற்சியை நிறைவு செய்தார். மாவ்யாவின் தந்தை வினோத் சுதன் தன் மகள் போர் விமானத்தின் பைலட் ஆனது மகிழ்ச்சியளிக்கிறது என்றார். மேலும், ""என் மகளை நினைத்து நான் பெருமிதம் அடைகிறேன். இன்றைக்கு மாவ்யா என் மகள் மட்டுமல்ல இந்த நாட்டுக்கே மகள்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.