மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சமையல் டிப்ஸ்: சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால்...

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

News image
Updated On :24 மார்ச் 2021, 6:00 pm IST

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும் சேர்த்து போட்டு திரித்தால்... சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும்.. சுவை, வாசனை, சத்து மூன்றும் அதிகப்படியாகும்.

கத்தரிக்காய் கூட்டோ பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிஷம் கழித்து இறக்குங்கள் மணம் கம கமவென்று இருக்கும்.

புதுசா வாங்கின அரிசி வடிக்கும் போது குழைந்துவிட்டால்  அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பொல பொலவென்று இருக்கும்.

தோசை வார்க்கும் போது சரியாக வராமல் அடிப்பிடித்தால், கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு 1/2 தேக்கரண்டி உப்பை தேய்த்து சுட்டால் நன்றாக வரும். 

வெங்காய பக்கோடா செய்வது போல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலைமாவு, எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசிறிச் செய்தால் கரகரப்பாகவும், மிக்க ருசியாகவும் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால் சிறிது கடலைமாவை கரைத்து சேர்த்தால்  காரம் குறைந்து சரியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.