தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

சமையல் டிப்ஸ்: சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால்...

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

News image
Updated On :24 மார்ச் 2021, 12:30 pm

வெஜிடபிள் சாலட் செய்யும் போது நீர் அதிகமாகிவிட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள் சரியாகிவிடும். சுவையாகவும் இருக்கும்.

கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையும் சேர்த்து போட்டு திரித்தால்... சப்பாத்தியோ பூரியோ எதுவானாலும்.. சுவை, வாசனை, சத்து மூன்றும் அதிகப்படியாகும்.

கத்தரிக்காய் கூட்டோ பொறியலோ எது செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிஷம் கழித்து இறக்குங்கள் மணம் கம கமவென்று இருக்கும்.

புதுசா வாங்கின அரிசி வடிக்கும் போது குழைந்துவிட்டால்  அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு விட்டால் பொல பொலவென்று இருக்கும்.

தோசை வார்க்கும் போது சரியாக வராமல் அடிப்பிடித்தால், கல்லில் ஒரு தேக்கரண்டி எண்ணெய்விட்டு 1/2 தேக்கரண்டி உப்பை தேய்த்து சுட்டால் நன்றாக வரும். 

வெங்காய பக்கோடா செய்வது போல் பிஞ்சு வெண்டைக்காயிலும் பக்கோடா செய்யலாம். காய்களை நீளவாக்கிலோ வட்டமாகவோ அரிந்து அத்துடன் கடலைமாவு, எண்ணெய் கொஞ்சம் கலந்து பிசிறிச் செய்தால் கரகரப்பாகவும், மிக்க ருசியாகவும் இருக்கும்.

சாம்பாரில் காரம் அதிகரித்து விட்டால் சிறிது கடலைமாவை கரைத்து சேர்த்தால்  காரம் குறைந்து சரியாகிவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.