ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

குழம்பு டிப்ஸ்...

மோர்க்குழம்புக்கு  அரைக்கும்போது பச்சை  மிளகாயை  சிறிது எண்ணெய்யில்  வதக்கிவிட்டு  அரைத்தால்  மோர்க்குழம்பு  வெண்மையாக  இருக்கும். 

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:23 pm IST


மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது பச்சை மிளகாயை சிறிது எண்ணெய்யில் வதக்கிவிட்டு அரைத்தால் மோர்க்குழம்பு வெண்மையாக இருக்கும்.அரைக்கவும் எளிது.

பாகற்காய் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்து போட்டு வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பே தெரியாது.

எந்த சாம்பார் செய்தாலும் நான்கு பச்சை வெங்காயத்தைக் கடைசியில் நைசாக அரைத்து சேர்த்துவிட்டு இறக்கினால் சாம்பார் பிரமாதமாக மணக்கும்.

குழம்பு செய்து கீழே இறக்கும்போது தனியா, கடலைப்பருப்பு, நிலக்கடலை, கொப்பரை, சிறிதளவு வெந்தயம், சிறிதளவு மிளகு இவைகளை அரைத்துப் பொடி செய்து குழம்பில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு கொதி வந்து இறக்கினால் குழம்பு சூப்பராக இருக்கும்.

வெந்தயக் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்யில் தாளித்து அதிலேயே மிளகாய் பொடி காய்கறி இவைகளையும் வதக்கி பிறகு புளி, உப்பு சேர்த்து குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாம்பார் செய்யும்போது கொதிக்கும் சாம்பாரில் அரை தேக்கரண்டி போட்டால் சாம்பார் கமகம என இருக்கும்.

ஆரஞ்சுப் பழத் தோலையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சிறி
தளவு எண்ணெய் ஊற்றி வதக்கி வற்றல் குழம்பு செய்தால் கமகமக்கும் மணம்.

சாம்பார் வாசனையுடன் இருக்க கொதித்து இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

வெந்தயக் குழம்பு, பாகற்காய் பிட்லை மணமாகவும் சுவையாகவும் இருக்க மூன்று உளுந்து அப்பளங்களை பொரித்து நொறுக்கிப் போட்டு இறக்கி விட வேண்டும்.

வற்றல் குழம்பு கொதித்த பின்னர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும்.

பருப்பு உருண்டைக் குழம்பில் பருப்பு உருண்டைகள் குழம்பில் கரையாமல் இருக்க பருப்பை அரைக்கும்போது ஒரு பிடி பச்சரிசியையும் சேர்த்து அரைத்து உருட்டிப் போட்டால் கரையாது.

காரக் குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு குழம்பு செய்தால் மணமாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.