தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

தேன் மருத்துவம்! 

வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும். துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.  

News image
Updated On :27 அக்டோபர் 2021, 12:30 am

மார்புவலி குறைய...

வெந்தயத்தை வேக வைத்து தேன்விட்டு பிசைந்து கூழாக்கி சாப்பிட்டு வந்தால் மார்புவலி குறையும். துளசி இலை சாறு, தேன் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.  

தான்றிக்காயை பொடி செய்து அதில் 2 சிட்டிகை எடுத்து தேனில் கலந்து நாக்கில் தடவிவந்தால் மார்புவலி குறையும்.  இஞ்சிச்சாறு, எலுமிச்சைப் பழச்சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சாப்பிட்டு வந்தால் மார்பு வலி குறையும்.

இதயம் பலம் பெற...

4- 5 செம்பருத்திப் பூவை  1தம்ளர் தண்ணீர்விட்டு கொதிக்க வைத்து, அத்துடன் தேன் கலந்து சாப்பிட இதயம் பலம் பெறும்.  மாதுளை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர இதயம் வலிமை பெறும்.

நெஞ்சு எரிச்சல் குறைய...

இஞ்சிசாறு, எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட நெஞ்சு எரிச்சல் குறையும்.  நெஞ்சுவலி குறைய வெந்தயக்கீரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி வடிக்கட்டி அந்த நீரில் தேன் கலந்து வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் பத்து நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குறையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.