பூரண கொழுக்கட்டை 

தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி நன்கு சூடானதும் அதில் சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, தண்ணீரை சூடு செய்ய வேண்டும்.
பூரண கொழுக்கட்டை 
Published on
Updated on
1 min read

கொழுக்கட்டை மேல் மாவு தயாரிக்க: 

தேவையானவை:

அரிசி மாவு - 1 கிண்ணம்
தண்ணீர் - ஒன்னே கால் டம்ளர்
நெய் - 1 தேக்கரண்டி
உப்பு - 2 சிட்டிகை 

செய்முறை:

தண்ணீரை ஒரு வாணலியில் ஊற்றி நன்கு சூடானதும் அதில் சிறிது உப்பு, ஒரு தேக்கரண்டி நெய் விட்டு, தண்ணீரை சூடு செய்ய வேண்டும். அதில் அரிசி மாவை கொட்டி நன்கு கிளற ஆரம்பிக்கவும். அடுப்பை சிறு தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். கைவிடாமல் மாவை நன்கு கிளறுங்கள். அப்போதுதான் கட்டியில்லாமல் வரும். மாவு முழு தண்ணீரையும் உறிஞ்சி விட, பின் வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும்வரை நன்கு கிளற வேண்டும். இதுதான் சரியான பதம். இந்த மாவை அடுப்பை அணைத்து விட்டு, எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com