மார்பிள் தரையில் சாதாரண கறை படிந்தால் சோப்புக் கரைசலை பயன்படுத்தி கழுவலாம்.
தண்ணீருடன் எலுமிச்சை சாற்றை ஊற்றி தேய்த்தாலும் பளிச்சிடும்.
எண்ணெய் கறைப் படிந்தால் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். வெதுவெதுப்பான நீரில் பேக்கிங் சோடாவை கரைத்து பயன்படுத்த வேண்டும்.
அப்படியும் கறை நீங்காவிட்டால் வினிகர் உபயோகிக்கவும். வெள்ளை வினிகரை துணியில் நனைத்து கறைமீது தேய்க்க வேண்டும்.
டிஷ்வாஷ் லிக்விட் திரவம் பயன்படுத்தினாலும் மார்பிள் பளிச்சிடும்.
கண்டிப்பாக மார்பிள் கறையைப் போக்க ஆசிட் பயன்படுத்தக் கூடாது. அது மார்பிள் பாலிஷை சிதைத்து சொரசொரப்பாக்கும். தரமற்ற, கடினமான சோப்புக் கரைசலையும் பயன்படுத்தக் கூடாது.