பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

பாட்டி வைத்தியம்!

செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:51 pm IST


செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குடல் புழுக்கள் அழியும், பருமன் மற்றும் கொழுப்பை குறைக்கும்.

அம்மான் பச்சரிசியின் பாலை முகப்பரு மீது தடவினால், முகப்பரு சரியாகும்.

சிறுநீர் உடலில் தேங்கினால் கை கால்களில் வீக்கம் உண்டாகும். கொத்துமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப் படாமல் வெளியேறும் .

முடக்கத்தான் கீரையை உப்பு மிளகு சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால் உடல் வலி, வாத நோய்கள், பறந்துவிடும் .

மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை சாப்பிட ஞாபக மறதி, உடல் சோர்வு, சளித் தொந்தரவுகள், நீங்கும்.

ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.

கற்பூரத்தையும், மிளகையும், தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை ஒரு துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தில்  ஒத்தடம் கொடுக்க சுளுக்கு சரியாகும்.

இஞ்சி சாறும், சின்ன வெங்காய சாறும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் தேவையான அளவு இன்சுலின் சுரக்கும்.

அரை தேக்கரண்டி சீரகம் தினம் தண்ணீரில்  கொடிக்க வைத்து குடித்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

ஏலக்காயைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம்; ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட இருமல் குணமாகும். 

வேப்பம்பழத்தை டீ செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல் நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.