கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு! எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் அவசர கூட்டம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!
/

பாட்டி வைத்தியம்!

செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

News image
Updated On :9 பிப்ரவரி 2022, 6:00 am IST


செம்பருத்திப் பூ 10 எடுத்து ஒரு டம்ளர் நீரில்  5 மிளகு 2 ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வர இதய படபடப்பு இதய வலி, இதய குழாய்களில் அடைப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சரியாகும்.

குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்க வைத்து குடித்தால் குடல் புழுக்கள் அழியும், பருமன் மற்றும் கொழுப்பை குறைக்கும்.

அம்மான் பச்சரிசியின் பாலை முகப்பரு மீது தடவினால், முகப்பரு சரியாகும்.

சிறுநீர் உடலில் தேங்கினால் கை கால்களில் வீக்கம் உண்டாகும். கொத்துமல்லி விதைகளை தேநீராக்கி குடித்தால் சிறுநீர் உடலில் தேக்கி வைக்கப் படாமல் வெளியேறும் .

முடக்கத்தான் கீரையை உப்பு மிளகு சேர்த்து சூப் செய்து குடித்து வந்தால் உடல் வலி, வாத நோய்கள், பறந்துவிடும் .

மிளகுப் பொடியை தேனுடன் கலந்து இருவேளை சாப்பிட ஞாபக மறதி, உடல் சோர்வு, சளித் தொந்தரவுகள், நீங்கும்.

ஆண்டுக்கு இருமுறையாவது கைகளில் மருதாணி வைத்தால் மனம் தொடர்பான கோளாறுகள் நீங்கும். அதன் குளிர்ச்சி மூளைக்கு ஓய்வைத் தரும்.

முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும், மூட்டுவலி நீங்கும்.

கற்பூரத்தையும், மிளகையும், தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதை ஒரு துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தில்  ஒத்தடம் கொடுக்க சுளுக்கு சரியாகும்.

இஞ்சி சாறும், சின்ன வெங்காய சாறும் தலா ஒரு தேக்கரண்டி கலந்து காலை வேளையில் குடித்து வர சர்க்கரை நோய் படிப்படியாக குறையும் தேவையான அளவு இன்சுலின் சுரக்கும்.

அரை தேக்கரண்டி சீரகம் தினம் தண்ணீரில்  கொடிக்க வைத்து குடித்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

ஏலக்காயைப் போட்டு கொதிக்க வைத்த நீரில் வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம்; ஈறுகளில் உண்டாகும் புண்கள் போன்றவை நீங்கும்.

புளிச்சக்கீரையை அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட இருமல் குணமாகும். 

வேப்பம்பழத்தை டீ செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும், ரத்தத்தை சுத்திகரிக்கும், தோல் நோய்கள் குணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.