டேபிள் ரோஸை சிறிது நீர்விட்டு அரைத்து அதனுடன் சிறிது தேன் கலந்து முகத்துக்குத் தடவி பத்து நிமிடத்திற்குப் பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால், முகத்தில் இருக்கும் கரும் புள்ளி, முகப்பரு மறையும். இதனை வாரம் மூன்று முறை செய்ய வேண்டும்.
டேபிள் ரோஸின் தண்டு, இலைகளை சுத்தம் செய்து விழுதுபோல் அரைத்து அத்துடன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து தலைமுடிக்குத் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு தலைக்கு சாம்பு அல்லது சிகைக்காய் தேய்த்து குளித்தால் முடி ஆரோக்கியமாகவும் கருகரு என்றும் இருக்கும்.