ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தக்காளி காய் பச்சடி

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும்.

News image
Updated On :29 மார்ச் 2022, 3:56 pm

சுந்தரி காந்தி

தேவையானவை

தக்காளி காய் - 8
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
கடுகு -  கால் தேக்கரண்டி
உளுந்து - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - சிறிது
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு

செய்முறை:   

வாணலியில் இரண்டு டம்ளர் நீர் ஊற்றி தக்காளி காய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பின்பு மத்தைக் கொண்டு நன்கு மசித்து தனியே வைக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து தாளித்து கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்  பொடியாக நறுக்கிய  வெங்காயம், உப்பு சேர்த்து, நன்றாக வதக்கவும்.  இதனுடன் மசித்து வைத்துள்ள தக்காளிக்காய் கரைசல் சேர்த்து, மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.  அதனுடன் கொத்துமல்லி இலையைச் சேர்த்துப் பரிமாறவும். ருசியான, சத்தான தக்காளி காய் பச்சடி தயார்.  இது இட்லி , தோசைக்கு சரியான ஜோடி. குறிப்பு: கூடுதல் சுவைக்கு வேக வைத்த சிறுபருப்பு சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.