பூண்டை வாங்கியதும் பல், பல்லாக உதிர்த்து காற்றாட விடுவது நல்லது. ஈரம் உலர்ந்தால் அழுகாது. கருக்காமலும் இருக்கும்.
கொத்துமல்லி இலை நீண்ட நாள்கள் புதியதாக இருக்கும்படி வைக்க, அவற்றை வாழை இலையில் வைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் போதும்.
கிண்ணத்தில் படிந்துள்ள காபி, டீ கறைகளை நீக்க உப்புத் தூளைத் தேய்த்து கழுவினால் போதும்.
உருளை, சேனைக் கிழங்குகளை ரோஸ்ட் கறி செய்யும்போது, கடைசியில் ரஸ்க் தூளைக் கொஞ்சம் தூவி ஒரு புரட்டினால் போதும். கறி நன்கு சுவை மிகுந்திருக்கும்.
ரவா உப்புமா மீதமாகிவிட்டால், அதில் சிறிதளவு அரிசி மாவைக் கலந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கலாம்.