தேவையானவை:
கடலைப் பருப்பு - 200 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள் - தேவையான அளவு
செய்முறை:
கடலைப் பருப்பை கழுவி, சமையல் சோடா சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிட்டு வடிகட்டி, நிழலில் உலர்த்தவும். உலர்ந்தவுடன் கடலைப்பருப்பை சூடான எண்ணெயில் சிறிது சிறிதாகப் போட்டு வறுத்து எடுக்கவும். மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து குலுக்கிவிட்டு, காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.