தேவையானவை:
பச்சரிசி (தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தியது) - 300 கிராம்
பாசிப் பருப்பு - 100 கிராம்
கடலைப்பருப்பு - 50 கிராம்
உப்பு, பெருங்காயத் தூள்- சிறிதளவு
எண்ணெய் - கால் கிலோ
காய்ச்சிய எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பை சிவக்க வறுத்து, ஆறவிட்டு, அரிசியுடன் சேர்த்து அரைக்கவும். இத்துடன் காய்ச்சிய எண்ணெய், உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு பிசையவும். மாவை முள்ளு முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் முறுக்காக பிழியவும். சிவந்தவுடன் எடுக்கவும்.