15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாசிப் பருப்பு பொங்கல்

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு காய்ந்ததும் பாசிப்பருப்பை போட்டு, நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.

News image
Updated On :15 ஜனவரி 2023, 12:30 am

தேவையானவை:

பச்சரிசி- 100 கிராம்
பாசிப் பருப்பு- 50 கிராம்
வெல்லம்- 200 கிராம்
நெய்-100 கிராம்
முந்திரி- 10
திராட்சை-10
ஏலக்காய்த் தூள்- அரை தேக்கரண்டி

செய்முறை; 

வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு தேக்கரண்டி நெய்விட்டு காய்ந்ததும் பாசிப்பருப்பை போட்டு, நல்ல வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த பருப்பை களைந்த அரிசியுடன் சேர்த்து, குக்கரில் போட்டு ஐந்து கிண்ணம் தண்ணீரில் சேர்த்து மூடி, இரண்டு விசில் வந்ததும், தீயைக் குறைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இறக்க வேண்டும். பிரஷர் அடங்கியதும் பால் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அரை கிண்ணம் தண்ணீரில் வெல்லத்தை சேர்த்து கரையும் வரை கொதிக்கவிட வேண்டும்.  வடிகட்ட வேண்டும். வடிகட்டிய வெல்லப் பாகை சாதத்துடன் சேர்த்து நன்றாகச் சேர்ந்துவரும் வரை கிளறி இறக்க வேண்டும். பின்பு, ஏலக்காய்த் தூள், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து நன்றாகக் கிளறவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.