இலையின்லேசுத் தன்மை, மானின் பார்வை, சூரிய கிரகணத்தின் கும்மாளம், மூடுபனியின் கண்ணீர், காற்றின் சலனம், முயலின் பயம், மயிலின் செருக்கு, அன்னத்தின் கழுத்து வழவழப்பு, வைரத்தின் கடினம், தேனின் இனிப்பு, புளியின் கொடூரம், நெருப்பின் கதகதப்பு, பனிக்கட்டியின் சில்லிப்பு, பறவையின் சலசலப்பு, புறாவின் கூவல்.. இவ்வளவையும் சேர்த்துப் பெண்ணாக ஆக்கினார் இறைவன். இது சம்ஸ்கிருதத்தில் ஒரு சுலோகம்.