தேவையானவை:
தினை 1 கிண்ணம்
கம்பு மாவு 1 கிண்ணம்
தக்காளி சாறு அரை கிண்ணம்
இஞ்சி மிளகாய் விழுது 1 தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது கால் கிண்ணம்
சீரகத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
தினையை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். அதனுடன் கம்பு மாவு, இஞ்சி மிளகாய் விழுது, தக்காளி சாறு, கொத்தமல்லி, சீரகத் தூள், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து உருண்டையாக எடுத்து பூரித்து திரட்டி சூடாக்கிய எண்ணெயில் பொரித்தெடுக்கவும். புதினா சட்னியுடன் சாப்பிட அபரிதமாக இருக்கும்.