தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
கொத்துமல்லி அழுகாமலும் பச்சையாகவும் இருக்க வேண்டுமானால், அதன் வேரை நறுக்கிவிட்டு மெல்லியத் துணியில் சுற்றி ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இரு வாரங்கள் கூட புதிதுபோல இருக்கும்.
முருங்கைக் கீரையை பொரியலுடன் ஒரு கோழி முட்டையைச் சேர்த்துகொண்டால் அது சத்தான உணவாக அமையும்.
தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.
சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.
உறை ஊற்றியவுடன் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது.
நன்கு புளித்தத் தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
புளி சாதம் தாளிக்கும்போது, சிறிது எள் பொடி சேர்த்து தாளித்தால் அதன் சுவை நமன்றாக இருக்கும்.
அரிசி வடகம் போடும்போது, சிறிது பால் சேர்த்துகொண்டால் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!

அதர்வா - கயாது லோஹரின் இதயம் முரளி படத்தின் ரிலீஸ் தேதி!

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

டென்டா வாட்டர் அண்ட் இன்ஃப்ரா சொல்யூஷன்ஸ் லாபம் 33% சரிவு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



