தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.
கொத்துமல்லி அழுகாமலும் பச்சையாகவும் இருக்க வேண்டுமானால், அதன் வேரை நறுக்கிவிட்டு மெல்லியத் துணியில் சுற்றி ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இரு வாரங்கள் கூட புதிதுபோல இருக்கும்.
முருங்கைக் கீரையை பொரியலுடன் ஒரு கோழி முட்டையைச் சேர்த்துகொண்டால் அது சத்தான உணவாக அமையும்.
தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.
சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல.
உறை ஊற்றியவுடன் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது.
நன்கு புளித்தத் தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.
இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
புளி சாதம் தாளிக்கும்போது, சிறிது எள் பொடி சேர்த்து தாளித்தால் அதன் சுவை நமன்றாக இருக்கும்.
அரிசி வடகம் போடும்போது, சிறிது பால் சேர்த்துகொண்டால் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.