திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சமையல் குறிப்புகள்..

தக்காளி சூப் தயாரிக்கும்போது,  சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். 

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 10:03 pm IST

தக்காளி சூப் தயாரிக்கும்போது, சிறிது கசகசாவை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டால் சூப் மணமாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும். 

கொத்துமல்லி அழுகாமலும் பச்சையாகவும் இருக்க வேண்டுமானால், அதன் வேரை நறுக்கிவிட்டு மெல்லியத் துணியில் சுற்றி ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் இரு வாரங்கள் கூட புதிதுபோல இருக்கும்.

முருங்கைக் கீரையை பொரியலுடன் ஒரு கோழி முட்டையைச் சேர்த்துகொண்டால் அது சத்தான உணவாக அமையும்.

தயிரை சுட வைத்து சாப்பிடக் கூடாது.

சூடான சாதத்தில் தயிர் கலந்து, கடுகு தாளித்து உப்பு கலந்து சாப்பிடுவது நல்லதல்ல. 

உறை ஊற்றியவுடன் தயிர் உறையாமல் இருந்தால் சாப்பிடக் கூடாது.

நன்கு புளித்தத் தயிரானது ரத்தக் கொதிப்பு, பித்த வாயு, வயிறு கோளாறு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல.

இரவில் தயிர் சாப்பிடக் கூடாது. 

புளி சாதம் தாளிக்கும்போது, சிறிது எள் பொடி சேர்த்து தாளித்தால் அதன் சுவை நமன்றாக இருக்கும்.

அரிசி வடகம் போடும்போது,  சிறிது பால் சேர்த்துகொண்டால் பளிச்சென்று வெண்மையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.