வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.
சாதம் குழைவாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் மேலும் குழையாது சாதம்.
கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றை கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறியவுடன் சரியான பதத்துக்கு அவை வந்துவிடும்.
பூரி தயாரிக்கும்போது, கோதுமை மாவை சோறு வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.
சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.