சமையல் குறிப்புகள்

வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
Updated on
1 min read


வெண்டைக்காயை வறுக்கும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவாக இருக்கும்.

சாதம் குழைவாகத் தெரிந்தால், சிறிதளவு நல்லெண்ணெயைச் சேர்த்துவிட்டால் மேலும் குழையாது சாதம்.

கேசரி, பொங்கல், அல்வா ஆகியவற்றை கெட்டியான பிறகு இறக்கக் கூடாது. கொஞ்சம் முன்னதாக இறக்க வேண்டும். ஆறியவுடன் சரியான பதத்துக்கு அவை வந்துவிடும்.

பூரி தயாரிக்கும்போது, கோதுமை மாவை சோறு வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி மிகவும் சுவையாக இருக்கும்.

சீடை, தட்டை, முறுக்கு செய்யும்போது சிறிது தேங்காய்ப் பால் விட்டுச் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com