தேவையான பொருள்கள்:
முருங்கைக் காய்- 4
உருளைக் கிழங்கு- 5
அவரைக்காய்- 50 கிராம்
புடலைங்காய்- 4
புளி- 1 உருண்டை
துவரம் பருப்பு- 50 கிராம்
தேங்காய்த் துருவல்- 1 மேசைக் கரண்டி
மிளகாய் வற்றல்- 4
மிளகு- 8
பெருங்காய்ப் பொடி- 1 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
கடுகு- 1 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
காய்களையும் கிழங்கையும் நறுக்கிக் கொஞ்சம் உப்புப் போட்டு, வேகவிட வேண்டும். துவரம் பருப்பைத் தனியே வேகவிட்டு, மசிக்க வேண்டும். புளியை மீதி உப்பைப் போட்டுக் கரைத்துகொண்டு வெந்தயக்காய் பருப்பைப் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். மிளகாய் விற்றல், தேங்காய்த் துருவல், மிளகு, பெருங்காயத்தை வறுத்துப் பொடி செய்துதாளித்துப் போட்டு கறிவேப்பிலையைப் போட்டு கொஞ்சம் அரிசி மாவைக் கரைத்து ஊற்ற வேண்டும்.