தேவையான பொருள்கள்:
பச்சரிசி மாவு 200 கிராம்
வேர்க்கடலைப் பருப்பு 100 கிராம்
உளுத்தம் மாவு, பெருங்காயப் பொடி தலா 1 மேசைக்கரண்டி
எள் 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 2 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை அரைமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர், தண்ணீரைவடிகட்டி வேர்க்கடலையைப் பருப்பை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அத்துடன் அரிசி மாவு, உளுத்தம் மாவு, எள், பெருங்காயத் தூöள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து, கொஞ்சமாக எடுத்து ஒரு வெண்ணெய்ப் பேப்பரில் முறுக்குகளாகப் பிழிய வேண்டும்.
வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் கரண்டியால் முறுக்கை எடுத்து எண்ணெயில் போட்டு வெந்ததும் எடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







