27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உணவுப் பொருள்களில் பூச்சி வராமல் இருக்க..!

உணவுப் பொருள்களில் பூச்சிகள் வராமல் இருக்க சில ஆலோசனைகள்.

News image

மிளகாய்

Updated On :25 ஆகஸ்ட் 2024, 12:00 am IST

உணவுப் பொருள்களில் பூச்சிகள் வராமல் இருக்க சில ஆலோசனைகள்:

பருப்பு வகைகளில் பெருங்காயத்தைத் தட்டிப் போட்டால் பூச்சிகள் வராது.

அரிசியில் மிளகாய் வற்றல் சிலவற்றைப் போட்டு வைத்தால், வண்டு பிடிக்காது.

உளுத்தம் பருப்பை வாங்கியதும் அதை முறத்தில் போட்டு தட்டினால், மாவு மாதிரியான பொருள்கள் வெளியேறும். தட்டிய பிறகு டப்பாவில் வைத்தால் வண்டுகள் வராது,

துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பில் பூச்சிகள் வராமல் இருக்க காய்ந்த வேப்பிலைகளையும், வசம்புத் துண்டுகளையும் போட்டு வைத்தால் போதும். உளுத்தம் பருப்பு எனில், மஞ்சள் தூளில், உப்பும் கலந்து வைக்கலாம்.

மிளகாய் பொடியில் வண்டுகள் வராமல் இருக்க, துணியில் சிறிது பெருங்காயத் துண்டை வைத்து மூட்டையாகக் கட்டி மிளகாய்ப் பொடி டப்பாலில் போட்டு வைத்தால் வண்டுகள் வராது.

பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத் தூள் கலந்து நிழலில் உலர்த்தி பத்திரப்படுத்தினால் வண்டுகள், பூச்சிகள் கூடுகள் பிடிக்காது.

Story image

மைதா, ரவா டப்பாக்களில் கல் உப்பை ஒரு துணியில்போட்டு முடிந்து போடலாம். உலர்ந்த வேப்பிலையைப் போடலாம். கசக்காது, புழு பூச்சிகள் வராது. சுக்குத் தூளும் தூவலாம்.

புளியை வாங்கி வந்ததும், அதிலுள்ள கொட்டைகளையும் நார்களையும் நீக்கிவிட்டு நன்கு வெயிலில் காயவிட்டு சிறிது கல் உப்பு சேர்த்து ஜாடியில் அடைத்துவிட்டால் ஓர் ஆண்டுக்கு மேல் புழுக்கள், பூச்சிகள் வராமல் இருக்கும்.

சர்க்கரை, இனிப்பு வகைகளில் எறும்பு வராமல் இருக்க, கொஞ்சம் கிராம்புகளை அதில் போட்டு வைக்கலாம்.

எள்டப்பாலில் சிறிது நெல்லைப் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.