தேவையான பொருள்கள்:
மீல்மேக்கர் உருண்டைகள்- 30
பால்- ஒரு லிட்டர்
சர்க்கரை ஒன்றரை கிண்ணம்
ரோஸ் வாட்டர்ஒரு தேக்கரண்டி
நெய் 2 தேக்கரண்டி
முந்திரி, திராட்சை சிறிதளவு.
செய்முறை:
கொதிக்கும் நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு, ஐந்து நிமிடங்கள் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பிழியவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி துருவலாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீல்மேக்கர் துருவலை நன்கு வதக்கவும். காய்ச்சிய பாலில் மீல்மேக்கர் துருவலைச் சேர்த்து, குறைந்த தீயில் வேகவிடவும். 20 நிமிடங்கள் கழித்து, சர்க்கரையைச் சேர்த்து கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது, முந்திரி, திராட்சை, ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். இதை குளிர வைத்தும் பரிமாறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


