கேழ்வரகு புட்டு

கேழ்வரகு மாவில் சிறிது உப்பு கலந்த நீரைத் தெளித்து சற்று ஈரமாகப் பிசறி ஆவியில் வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.
கேழ்வரகு புட்டு
கேழ்வரகு புட்டு
Updated on
1 min read

தேவையானவை:

கேழ்வரகு- 100 கிராம்

பெரிய வெங்காயம்- 2

பச்சை மிளகாய்- 3

எலுமிச்சைச் சாறு, கடுகு, - 1 தேக்

கரண்டி

உளுத்தம் பருப்பு- 2 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

மல்லித் தழை- சிறிதளவு

செய்முறை:

கேழ்வரகு மாவில் சிறிது உப்பு கலந்த நீரைத் தெளித்து சற்று ஈரமாகப் பிசறி ஆவியில் வேகவிட வேண்டும். நன்றாக வெந்ததும் ஒரு தட்டில் கொட்டி ஆறவிட வேண்டும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, அத்துடன் கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கலந்து எடுத்து வைக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com