கவனியுங்க...

பாலேடை முகத்தில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து, பின்னர் பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்தால் பருக்கள் மறையும்.
கவனியுங்க...
Published on
Updated on
1 min read

பருக்கள் மறைய...: பாலேடை முகத்தில் தேய்த்து முப்பது நிமிடங்கள் கழித்து, பின்னர் பயத்தம் பருப்பு மாவைத் தேய்த்துக் குளித்தால் பருக்கள் மறையும். கீரைகள், பச்சைக் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டும். மஞ்சள் தூள், சோற்றுக் கற்றாழைகளைச் சேர்த்து அரைத்து பூச வேண்டும்.

சமையலறையில்...: புதினாவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி அரைத்து அதனுடன் தக்காளி சூப்புடன் சேர்த்தால் சுவையாகவும் வாசனையாகவும் இருக்கும்.

பொரியல், கூட்டு ஆகியவற்றில் உப்பு அதிகமாகிவிட்டால் தேங்காய்த் துருவல் சேர்த்துகொள்ளலாம்.

கீரையைச் சமைக்கும்போது, ஒரு தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்து சத்துகள் போகாது.

உப்புத் தண்ணீர் தெளித்துத் துடைத்தால் சாப்பாட்டு மேசையில் ஈக்கள் தொல்லை குறையும்.

முட்டைக் கோஸ் சமைக்கும்போது, எலுமிச்சைச் சாறு, சிறிது சேர்த்தால், கோஸ் வாசனை வராது.

முருங்கை இலையை உருவிப் போட்டு, காய்ச்சி வைத்தால் தேங்காய் எண்ணெய் காராமல் இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com