ரத்தச் சோகைக்கு கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ் சாப்பிடலாம்.
ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப் பழம் சாப்பிடலாம்.
சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறு தானியங்கள், பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி சாப்பிடலாம்.
வயிற்றுப் புண்ணுக்கு கேரட், பூசணி சாப்பிடலாம்.
இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, அன்னாசிப் பழங்களைச் சாப்பிடலாம்.
கொழுப்பு குறைய கொள்ளு, கேரட் நிறைய சாப்பிடலாம்.
சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறு சாப்பிடலாம்.
முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் கசப்பு குணமாகும்.
புளியந்தளிரை துவையலாக்கி, உண்ண வயிற்று மந்தம் தீரும்.
நாள்தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.