குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

வாழைத்தண்டு வடாம்

வாழைத்தண்டு வடாம்: பாரம்பரிய ரெசிப்பி

News image
Updated On :2 ஜூன் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பச்சரிசி மாவு- 200 கிராம்

பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு- அரை கிண்ணம்

ஜவ்வரிசி- 100 கிராம்

மிளகாய்த் தூள்- 1 தேக்கரண்டி

தக்காளிச் சாறு- 3 மேசைக்கரண்டி

பெருங்காயப் பொடி- 1 தேக்கரண்டி

எண்ணெய், உப்பு- தேவையான அளவு

செய்முறை:

முதல் நாள் இரவு இரண்டு கிண்ணம் தண்ணீரில் அரிசி மாவைக் கலந்து ஊறவைக்க வேண்டும். ஜவ்வரிசியைத் தனியாகத் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் வாழைத்தண்டை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி, மோர் சிறிதளவு கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும்.

ஜவ்வரிசியை தண்ணீர் வடித்து, ஆவியில் வேக வைக்க வேண்டும். வேக வைத்த ஜவ்வரிசியை ஆற வைத்து, பின்னர் எண்ணெய் போல் விழுதாக அரைக்க வேண்டும். அரிசி மாவு, மிளகாய், உப்புத் தூள், பெருங்காயப் பொடி, எண்ணெய் ஆகியவற்றை அதில் சேர்த்து கட்டி வராமல் கிளற வேண்டும். மாவு நன்றாக வெந்ததும் ஜவ்வரிசி, வாழைத்தண்டு, கெட்டியான தக்காளி ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும்.

ஒரு வெள்ளைத் துணியை வெயிலில் விரித்து அதன் மேல் கலவையை சிறிய உருண்டைகளாக வைத்து, வெயிலில் நன்றாகக் காய வைத்து எடுத்துவைத்து கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.