மணத்தக்காளி வத்தல்

மணத்தக்காளி வத்தல்: வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கலாம்
மணத்தக்காளி வத்தல்
Published on
Updated on
1 min read

தேவையான பொருள்கள்:

மணத்தக்காளி- 600 கிரம்

புளித்த தயிர்- 100 மில்லி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

மணத்தக்காளியின் காம்பை அகற்றி, சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். தயிரைவிட்டு உப்புப் போட்டு நன்றாகக் கிளறி ஒருநாள் முழுவதும் மூடிவைக்க வேண்டும். மறுநாள் தட்டில் எடுத்துப் போட்டு வெயிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

காய்ந்ததும் எடுத்துப் பத்திரப்படுத்த வேண்டும். மணத்தக்காளி வற்றலை எண்ணெயில் வறுத்து குழம்பில் போடலாம். வறுத்து தயிர் சாதத்துக்குத் தொட்டுச் சாப்பிடலாம். மணத்தக்காளி வற்றலை எண்ணெயில் பொறித்து மிக்ஸியில் பொடி செய்து சூடான சாதத்தில் போட்டு கொஞ்சம் நெய்விட்டு கிளறிச் சாப்பிடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com