தேவையான பொருள்கள்:
தேங்காய் பால் , கம்பு மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
நெய் - 4 தேக்கரண்டி
செய்முறை:
தேங்காய் பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி எடுத்து வைக்கவும். கம்பு மாவில், ஏலக்காய் பொடி போட்டு கலந்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்து ஊறவைக்கவும். நெய்யைத் தடவி உருண்டை பிடித்து இட்லி தட்டியில் வேக வைத்து எடுத்து தேங்காய் பாலில் போட்டு சாப்பிடவும்.