தேவையான பொருள்கள்:
பச்சரிசி, புழுங்கல் அரிசி, புளித்த தயிர்- தலா 100 கிராம்
அவல்- 50 கிராம்
உப்பு- சிறிதளவு
செய்முறை:
இரண்டு வகை அரிசியையும் ஒன்றாக நனைய வைக்க வேண்டும். இரண்டு மணி நேரம் ஊறவைத்து நீரை வடித்து அரிசியை அரைத்து அவலையும் சேர்த்து அரைத்து தோசைமாவு பக்குவத்தில் தயிர் கலந்துவைக்க வேண்டும். மறுநாள் தோசைக்கல்லை அடுப்பில் போட்டு ஒரு கரண்டி மாவை ஊற்றி, எண்ணெய் ஊற்றி தோசையாக வெந்தெடுக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.