தேவையான பொருள்கள்:
வெள்ளை மொச்சை- 200 கிராம்
கருப்புக் கொண்டைக் கடலை, முழுத் துவரை, காராமணி, பச்சைப்பயிறு- தலா 100 கிராம்
வரமிளகாய்- 5
தேங்காய்த் துருவல்- 1 கரண்டி
கடுகு, உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- 1 ஆர்க்கு
செய்முறை:
மொச்சை, கொண்டைக் கடலையை ஆறு மணி நேரம் ஊறவைத்து, வேக வைக்கவும். காராமணி, பச்சைப் பயிறு, துவரை மூன்றையும் தனியே ஊறவைத்து, வாணலியில் வேக வைத்து எடுக்க வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையைத் தாளித்து கிள்ளிய வரமிளகாயைப் போட்டு சிவந்ததும் தண்ணீர் வடித்துவைத்துள்ள பயிறு, கடலை, துவரையைச் சேர்த்து தேவையான உப்புடன் நன்றாகக் கிளறி தேங்காய்த் துருவலைச் சேர்த்து ஒரு கிளறு கிளரி கீழே இறக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும்! அமைச்சா் லோகேஷ் தமிழ்ச்செல்வன்

சாலை விபத்துகளைக் குறைக்க தனி செயல் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளது குறித்து வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...

131.36 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி இலக்கு: வேளாண்துறை அமைச்சா் வினோத்
தானிய தோசை
விடியோக்கள்

”திட்டங்களின் பெயரை விட முக்கியம்...” அமைச்சர் அருண்ராஜ் | TVK


