இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

இளநரை பிரச்னையா? என்ன செய்யலாம்?

அடுக்கு செம்பருத்தி மலர்களைக் காயவைத்துப் பொடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு நாள் வைத்து, தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.

News image
Updated On :6 ஏப்ரல் 2025, 5:01 pm

சௌமியா சுப்பிரமணியன்

அடுக்கு செம்பருத்தி மலர்களைக் காயவைத்துப் பொடித்து, தேங்காய் எண்ணெயில் போட்டு வெயிலில் இரண்டு நாள் வைத்து, தலைக்குத் தடவி வந்தால் இளநரை வராது.

கருவேப்பிலை, நெல்லிக்காய், பாகற்காய், பீட்ரூட், சுண்டைக்காய், கீரைகளைச் சாப்பிட்டு வர தலைமுடி நரைக்காமல் இருக்கும்.

நெல்லி முள்ளி, கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு சேர்த்து அரைத்துத் தலையில் தடவி ஊறவைத்து குளித்தால், இளநரை மறையும்.

Story image

நெல்லிக்காய் பொடி, கறிவேப்பிலையை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, தலைக்குத் தடவி அரை மணி நேரம் கழித்து, அலசவும். நாளடைவில் இளநரை மறையும்.

ஆலிவ் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற இயற்கை எண்ணெய்களை உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.