வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

வேப்பம் பூ வற்றல்...

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

News image

வேப்பம் பூ

Updated On :7 ஜூன் 2026, 4:05 am IST

நாகஜோதி கிருஷ்ணன்

ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.

வடாம் செய்ய, மாவுக் கூழ் கிளறி ஆறிய பிறகே மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் கட்டி கட்டியாக இருக்கும்.

வடாம் செய்யும் கூழ் மாவை ஒரு சிறு குழிக் கரண்டியில் எடுத்து துணியில் வட்ட வட்டமாக ஊற்றினால், வடாம் அழகாக வட்டமாக வரும்.

குழம்பு, கருவடாம் செய்யும்போது கொத்துமல்லித் தழையை அரைத்துச் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.

வடாம் மாவுக் கூழ் கிளறும்போதே கட்டி பெருங்காயத்தை ஊறவைத்து, அந்த நீரைக் கலந்தால் வடாம் மணமாக இருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும்.

புளித்த தயிரில் வேப்பம் பூவைப் போட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால், வேப்பம் பூ வற்றல் கிடைத்துவிடும்.

வடாம் செய்யும்போது, பழைய சாதத்துடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.