நாகஜோதி கிருஷ்ணன்
ஜவ்வரிசி வடாம் முத்து முத்தாக இருக்க வேண்டும் என்றால், ஜவ்வரிசியை ஊற வைக்காமல் தண்ணீருடன் சேர்த்துக் கிளற வேண்டும்.
வடாம் செய்ய, மாவுக் கூழ் கிளறி ஆறிய பிறகே மாவை வட்டமாக ஊற்ற வேண்டும். சூடாக ஊற்றினால் கட்டி கட்டியாக இருக்கும்.
வடாம் செய்யும் கூழ் மாவை ஒரு சிறு குழிக் கரண்டியில் எடுத்து துணியில் வட்ட வட்டமாக ஊற்றினால், வடாம் அழகாக வட்டமாக வரும்.
குழம்பு, கருவடாம் செய்யும்போது கொத்துமல்லித் தழையை அரைத்துச் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
வடாம் மாவுக் கூழ் கிளறும்போதே கட்டி பெருங்காயத்தை ஊறவைத்து, அந்த நீரைக் கலந்தால் வடாம் மணமாக இருப்பதுடன் எளிதில் செரிமானம் ஆகும்.
புளித்த தயிரில் வேப்பம் பூவைப் போட்டு நன்றாக வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக் கொண்டால், வேப்பம் பூ வற்றல் கிடைத்துவிடும்.
வடாம் செய்யும்போது, பழைய சாதத்துடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால் வடாம் மிகவும் சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




