பட்டாம் பூச்சி பறக்கிறது -உயிர்ப்
பூவின் இதழைத் திறக்கிறது!
பட்டுப் போன்ற சிறகாலே -தினம்
பறந்து துயரம் மறக்கிறது!
மொட்டின் மேலே அமர்கிறது -அதில்
மூழ்கி வாசம் நுகர்கிறது!
வட்டம் போட்டுப் பறந்தபடி -தேன்
வாரிக் குடித்து நகர்கிறது!
சிறகால் உலகை அளக்கிறது -தன்
ஜீவனை மகிழ்வாய் வளர்க்கிறது!
சுறுசுறுப்பாகத் தினம் பறந்து -நறுஞ்
சோலையில் பூப்போல் கலக்கிறது!
வண்ணம் சுமந்து வாழ்கிறது -தன்
வனப்பால் உலகை ஆள்கிறது!
மண்ணில் சொர்க்கம் கண்டதுபோல் -அது
மலரின் மடியில் வீழ்கிறது!
பட்டாம் பூச்சி போலிருப்போம் -தினம்
பகலும் இரவும் மகிழ்ந்திருப்போம்!
கிட்டா இன்பம் கிட்டுமென -நாம்
காலையில் சுகமாய்க் கண்விழிப்போம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பரபரப்பான கிளைமேக்ஸ்... ஒரே நாளில் நிறைவடைந்த இரண்டு தொடர்கள்!

முதல்வர் விஜய்க்கு ‘இசட் பிளஸ்’ பாதுகாப்பு! எப்படி இருக்கும்?

எம்எல்ஏவாகப் பதவியேற்ற பிரேமலதா விஜயகாந்த்! எழுந்து நின்று வாழ்த்திய விஜய்!

இன்று முதல் ஒளிபரப்பாகும் துளசி தொடர்!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

