

நீரே உயிருக்கு ஆதாரம்!
நீரே உயிருக்கு ஆதாரம் - என்றும்
நீர்வளம் காத்தல் அறமாகும்!
பூமாதேவிக்குப் பொன்னாடை
புவி மீதினில் ஓடிடும் நீரோடை
வாழும் உயிர்கள் யாவினுக்கும் - வான்
வழங்கிய அமுதக் கொடையாகும்!
பூமியைத் தோண்டி நீர் எடுத்து புவி
வளத்தைக் கெடுத்து நாம் அழித்து
இயற்கை வளத்தை தொலைப்பதுபோல்
இல்லை வேறொரு பழிபாவம்!
நீர்வளம் காக்க முடிவெடுப்போம் - வரும்
சந்ததி வாழ வழிவகுப்போம்
பார்புகழ் வாழ அதுவொன்றே நாம்
செய்திடும் நல்ல செயலாகும்!
வாயிலா ஜீவன்கள் வாழ்ந்திடவும் - புவி
வளத்தைக் காத்து வாழ்ந்திடவும்
யாவரும் ஒன்றாய்ச் சேர்ந்திடுவோம்
இனிதே இங்கே வாழ்ந்திடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.