டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மலர்க் கூடை

வாசலில் ஒருமரம் வளர்ந்து இருந்தது! வாசனை மலர்களை வசந்தத்தில் சொரிந்தது! காலையில் அம்மா கண்விழித் தெழுந்தாள்! வேலைகள் முடித்திட விரைவுடன் முனைந்தாள்! வீட்டை வாசலை வீதியைப் பெருக்கிக் கூட்டி வாரியே கூடை

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 10:53 pm

தளவை இளங்குமரன்

வாசலில் ஒருமரம்

வளர்ந்து இருந்தது!

வாசனை மலர்களை

வசந்தத்தில் சொரிந்தது!

காலையில் அம்மா

கண்விழித் தெழுந்தாள்!

வேலைகள் முடித்திட

விரைவுடன் முனைந்தாள்!

வீட்டை வாசலை

வீதியைப் பெருக்கிக்

கூட்டி வாரியே

கூடையில் அள்ளினாள்!

குப்பெனக் கூடையே

பூக்களால் நிறையவே

குப்பைக் கூடையே

பூக்கூடை ஆனது!

மனதையும் வாக்கையும்

மலர்களாய் ஆக்கினால்

மனிதர்தம் வாழ்க்கையும்

மலர்க்கூடை ஆகிடும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.