தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தந்தை பெரியார்

வணிகக் குடும்பம் பெற்றெடுத்தவயிர நெஞ்சம் வாய்த்தவராம்!

News image
Updated On :25 ஜனவரி 2013, 11:27 am

அ.கருப்பையா

வணிகக் குடும்பம் பெற்றெடுத்த

வயிர நெஞ்சம் வாய்த்தவராம்!

துணிவும் பண்பும் நிறைந்திட்ட

தொண்டர் தந்தை பெரியாராம்!

சாதி இருளைப் போக்கிடவும்

சமத்துவம் எங்கும் நிலைத்திடவும்

வீதி தோறும் பகுத்தறிவாம்

விளக்கை ஏற்றி வைத்திட்டார்!

வீட்டில் இருந்த அனைவரையும்

விரும்பி அணியச் செய்ததுடன்

நாட்டில் உள்ள ஊரெல்லாம்

நடந்தே விற்றார் கதராடை!

கள்ளுக் கடையைத் திறக்காமல்

தடுத்துக் காத்து, காசுபணம்

அள்ளித் தந்திடும் தென்னைகளை

அழித்து, காந்தியம் பேணிட்டார்!

பெண்கள் உரிமை பெறச்செய்து

பேதமை நிறைந்த சமுதாயப்

புண்கள் தீர்க்கும் மருந்தாகப்

புரட்சிக் கருத்துகள் விதைத்திட்டார்!

ஆலயம் நுழையும் போராட்டம்

அழைத்து, உழைத்து வென்றவரை

ஞாலம் போற்றும் நல்லவராம்

"வைக்கம் வீரரை' வாழ்த்திடுவோம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.