தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பொன்மொழிகள்

பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும். ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்!

News image
Updated On :13 பிப்ரவரி 2016, 10:43 am

அ.கருப்பையா

*   பொய் ஆடம்பரமான உடை அணிந்து கொண்டு வரும். ஆனால் உண்மைக்கு எளிமையான உடையே பிடிக்கும்!

*   உன்னை நீயே கிண்டல் செய்து கொள்ள முடிகிறதா? அப்படியென்றால் நீ சந்தோஷமாய் வாழ்கிறாய் என்று அர்த்தம்!

*   வாழ்க்கைப் பாதை முட்கள் நிறைந்தது. நீ செருப்புப் போட்டுக்கொண்டு நடந்தால் புத்திசாலியாகிறாய். செருப்புப் போடாமல் நடந்தால் அனுபவசாலியாகிறாய்!

*   பிறரது சோகத்தைக் கண்டு சிரித்தால் நீ ஒரு முட்டாள். உனது சோகத்தைக் கண்டு நீயே சிரித்தால் நீ மேதை!

*   சிறிய தொல்லைகளிலிருந்து தப்பிக்க எளிய வழி..., பெரிய தொல்லைகளை நினைத்து ஆறுதல் பட்டுக் கொள்வதுதான்!

*   காலத்திற்குப் பேசும் சக்தி கிடையாது....., ஆனால் என்ன விந்தை பாருங்கள்! காலம்தான் எல்லாவற்றிற்கும் பதில் சொல்கிறது!

*   உதவி கேட்டு அழுபவன், உதவி செய்பவனை எப்பாடு பட்டாவது சிரிக்க வைக்க வேண்டும்!

*   உன்னைப் பற்றி உனக்குத் தெரியவேண்டுமா? யாரிடமாவது உதவி கேட்டுப்பார்!

*   யாரைப்பற்றியும் உனக்குக் கவலை இல்லையென்றால் உன்னைப் பற்றியும் உனக்குக் கவலை இல்லை என்று அர்த்தம்!

*   தனியாக அழலாம்...!  ஆனால் தனியாகச் சிரிக்க முடியாது...,தவறாக நினைப்பர்! சேர்ந்தே சிரிப்போம்! மகிழ்ச்சியைப் பரப்புவோம்!

(பரிகாசமூட்டும் பழமொழிகளும்  பொன் மொழிகளும்--நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.