1890-இல் ரோம் பேரரசில் வெசூவியஸ் என்ற எரிமலை இருந்தது. அதன் அடிவாரத்தில் போம்பே என்ற அழகான நகரம். அதன் பாதுகாப்பாளனாக ஒரு காவலன் நியமிக்கப்பட்டிருந்தான். எதிர்பாராமல் ஒருநாள் அந்த எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. மக்கள் சிதறியோடி தப்பித்தனர். டோம்பே நகரமே அழிந்தது. ஆனால், அந்த காவலன் மட்டும் தன் கடமையிலிருந்து தவறாமல் அதே இடத்தில் நின்றான். விளைவு! எரிமலைக் குழம்பில் அவன் உடல் சாம்பலானது. மிஞ்சிய அவனது உடல் கவசம், தலை கவசம், கையிலிருந்த ஈட்டி மட்டும் இன்றைக்கும் இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் அருங்காட்சியகத்தில் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! என்ற கீதோபதேசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.