

காட்டுப் பாதையில் ஓரன்பர்
கால்கள் கடுக்க நடந்திட்டார்
மேட்டுப் பகுதியில் ஓரிடத்தில்
மிகவள மாகவே பூசணியின்
கொடியில் பெரும்பெரும் காய்கள் பல
குண்டாய் அழகாய் இருந்தனவாம்
விடிந்தது முதலே நடந்ததனால்
வியர்த்தே அலுத்துப் போனாராம்!
ஆல மரத்தின் நிழலினிலே
அயர்ந்தே படுத்துக் கொண்டாராம்
மேலே பார்த்தார் மரத்தினிலே
மெல்லிய சிறுசிறு பழங்களினை
எம்மாம் பெரிய ஆலமரம்
இதிலே சின்னஞ் சிறுபழங்கள்
அம்மாடி பூசணிக் கொடியினிலே
அடடா அளவில் பெரும் பழங்கள்
என்னே இயற்கையின் வஞ்சனைதான்
ஏனோ இந்த மாற்றங்கள்
எண்ணிய படியே தூங்கிவிட்டார்
இயல்பாய் குறட்டையும் விட்டாராம்!
பட்டென எதுவோ மூக்கின் மேல்
பட்டதும் திடுகிட் டெழுந்தாராம்!
பட்டது ஆலம் பழமென்று
பார்த்துப் புரிந்தே கொண்டாராம்!
அடடா! இயற்கையின் அற்புதத்தை
அறியா மல்தான் நினைத்திட் டேன்
உச்சியி லிருந்தே பூசணிதான்
மூக்கில் விழுந்தால் என்னாகும்?
எது? எது? எப்படி எங்கேதான்
இருந்திட இயற்கை வகுத்த நெறி
அதுவே சரியென உணர்ந்தாராம்
எழுந்தே இயற்கையைத் தொழுதாராம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கோவில்பட்டி பகுதியில் போலீஸாா் வாகன சோதனை
குட்கா பொருள்கள் விற்ற மளிகைக் கடைக்காரா் கைது

தேக்கமடைந்து நஷ்டத்தை தவிா்க்கும் வகையில் பல்லடத்தில் கறிவேப்பிலை பவுடா் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

