வாழைப்பழத்தைச் சாப்பிட்ட குட்டிக் குரங்கு அதன் தோலை நடைபாதையில் போட்டது. அந்தப் பக்கம் ஒரு ஆமை ஊர்ந்து வந்தது.
""குட்டிக் குரங்கே!.....பாதையில் பழத்தோலைப் போட்டால் யாராவது மிதித்துச் சறுக்கி விழுந்து விட மாட்டார்களா? தோலை ஓரமாகப் போடலாமே'' என்றது ஆமை.
""ஏய்!....ஓட்டு மூடி போட்ட ஆமையே!....வாயை மூடிக்கொண்டு போ!....உன்னோட அறிவுரை எனக்குத் தேவையில்லே!...''என்று ஆணவமாகச் சொன்னது குட்டிக் குரங்கு.
இதைக் கேட்ட ஆமை அமைதியாகச் சென்று விட்டது.
குட்டிக் குரங்கு பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தது. அப்போது அந்தக் குட்டிக் குரங்கை ஒரு வேடன் பார்த்து விட்டான்!
வேடனைப் பார்த்த குட்டிக் குரங்கு ஓட ஆரம்பித்தது. ஓடிய வேகத்தில் அதன் கால் பழத்தோலின் மீது சறுக்கியபடிதரையில் சுருண்டு விழுந்தது! உடலெங்கும் பட்ட அடியோடு ஒரு வழியாக ஓடித் தப்பித்தது. ஒரு மரத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. உடலெங்கும் வலித்தது. குரங்கு, அந்த ஆமை சொன்னதைக் கேட்டிருக்கலாம் என்று மனதில் நினைத்தது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டத்தின் முன் அனைவரும் சமம்: போக்சோ வழக்கில் மத்திய அமைச்சர் மகன் கைது!

11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளைப் பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!
டிராக்டா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை
கஞ்சா வைத்திருத்த சிறுவன் கைது
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

