மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அன்னை பூமி!

வீசிய விதைகளை வயிற்றினில் தாங்கிவிருட்சம், செடி, கொடி எல்லாம் தாங்கிஅரும்புடன், மொட்டு, மலர்களோடு

News image
Updated On :21 ஏப்ரல் 2018, 8:39 am

சுமன்

வீசிய விதைகளை வயிற்றினில் தாங்கி
விருட்சம், செடி, கொடி எல்லாம் தாங்கி
அரும்புடன், மொட்டு, மலர்களோடு
காய், கனி சுவைபட உணவாய் அளித்தாய்!

முகில்கள் முட்டும் மலைகள் தாங்கி
முட்டி மோதிய அருவிகள் தாங்கி
நதிகள், ஆழ்கடல் அனைத்தையும் தாங்கி
அழகிய முத்துப் பவழங்கள் தந்தாய்!

நச்சுப்புகைகள், நெகிழிகள் தாங்கி
நடக்கும், மிதிக்கும் பாதங்கள் தாங்கி
மல, ஜலக் கழிவுகள் மொத்தமும் தாங்கி
பொறுத்துப் பொறுத்து எங்களைக் காத்தாய்!

கார்முகில் குளிர்ந்து கீழ் விழும் நீரால்
நன்னீராடு! மேனி குளிர்வாய்!
பசுமை ஆடைகள் உடுத்திக் கொள்வாய்!
வண்ண மலர்களைச் சூட்டிக் கொள்வாய்!

தங்கம், வெள்ளி, ரத்தினக் கற்கள்
அனைத்தும் உனதே சூட்டிக் கொள்வாய்!
பொறுமையின் சிகரம்! கருணைக் கடல் நீ!
தாயே சரணம்! உன் திருவடி சரணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.