மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாராட்டுப் பாமாலை!  15 - வீர "முத்து மாரி ' அம்மா!

கோவா வால்பாறை அருகினிலேபெரிய கல்லாறை ஊரினிலேசேவை உணர்வுடை சத்யாவெனும்

News image
Updated On :22 செப்டம்பர் 2018, 7:34 am

கொ.மா.கோதண்டம்

கோவா வால்பாறை அருகினிலே
பெரிய கல்லாறை ஊரினிலே
சேவை உணர்வுடை சத்யாவெனும்
சிறுமி வீட்டின் பின்புறத்தில்

செடிக்குநீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்
திடீரென்று வந்திட்ட புலி ஒன்று
துடிப்பாய் சிறுமியின் மேல் பாய்ந்தே
தூக்கி இழுத்தே சென்றதுவாம்!

அலறல் சத்தம் கேட்டவுடன் 
அம்மா "முத்து மாரி' யுமே
பலமுடன் கட்டை ஒன்றாலே
பாய்ந்தே புலியை அடித்தாராம்!

அடிபட்ட புலியும் சிறுமிதனை 
அங்கேயே விட்டுவிட் டோடியதாம்!
தப்பினாள் அந்த சின்னக் குழந்தை - தாய்
துணிவுடன் புலியைத் தாக்கியதால்!

புலிதனை முறத்தினால் அடித்து விரட்டிய 
வீரத் தமிழ்ப் பெண் செயல் மீண்டும் 
கண்முன் நடந்தது! கேட்டோர் வியந்தனர்!
கைகள் தட்டிப் பாராட்டினரே!

வீர முத்து மாரிக்கு "கல்பனா சாவ்லா'  
விருதினை அளித்தது அரசாங்கம்! - இதைப்
படித்தோர் அனைவர் உள்ளத்தினிலும் 
வீரம் தோன்றும் இது திண்ணம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.