92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குழந்தைப் பாட்டு!: கூடி வாழ்வோம்!

இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் விழியை மூடிக் காக்கலாம்!இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 9:48 am

அழகு இராமானுஜன்


இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் 
விழியை மூடிக் காக்கலாம்!
இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 
குழலில் இசையை ஊதலாம்!

இரண்டு கால்கள் இயங்கினால்தான் 
தரையின் மீது நடக்கலாம்!
இரண்டு சிறகு அசைந்திட்டால்தான் 
பறவை வானில் பறக்கலாம்!
விரல்கள் ஐந்து இணங்கினால்தான் 
சோற்றைப் பிசைந்து உண்ணலாம்!
கரங்கள் இரண்டு குவிந்திட்டால்தான் 
வணக்கம் செய்து மகிழலாம்!

நாலு கால்கள் நிலைத்திட்டால்தான் 
பந்தல் மேலே போடலாம்!
நாலு பேர்கள் கூடினால்தான் 
நற்செயல்கள் நடந்திடும்!

கூடி வாழும் வாழ்விலேதான் 
கோடி இன்பம் உளதெனப் 
பாடிவைத்தார் நமது கவிஞர் 
பாரதியார் தானடா! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.