உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

குழந்தைப் பாட்டு!: கூடி வாழ்வோம்!

இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் விழியை மூடிக் காக்கலாம்!இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2019, 3:18 pm IST


இரண்டு இமைகள்  இணைந்திட்டால்தான் 
விழியை மூடிக் காக்கலாம்!
இரண்டு உதடு இசைந்திட்டால்தான் 
குழலில் இசையை ஊதலாம்!

இரண்டு கால்கள் இயங்கினால்தான் 
தரையின் மீது நடக்கலாம்!
இரண்டு சிறகு அசைந்திட்டால்தான் 
பறவை வானில் பறக்கலாம்!
விரல்கள் ஐந்து இணங்கினால்தான் 
சோற்றைப் பிசைந்து உண்ணலாம்!
கரங்கள் இரண்டு குவிந்திட்டால்தான் 
வணக்கம் செய்து மகிழலாம்!

நாலு கால்கள் நிலைத்திட்டால்தான் 
பந்தல் மேலே போடலாம்!
நாலு பேர்கள் கூடினால்தான் 
நற்செயல்கள் நடந்திடும்!

கூடி வாழும் வாழ்விலேதான் 
கோடி இன்பம் உளதெனப் 
பாடிவைத்தார் நமது கவிஞர் 
பாரதியார் தானடா! 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.