மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நினைவுச் சுடர்!: யசோதையின்  திகைப்பு! 

யசோதா ஒரு மிகப் பெரிய பானையில் மத்தைப் போட்டுத் தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.  உர்ர்...உர்ர்... என்று சத்தம் வந்தது! கிருஷ்ணனுக்கு நாக்கில் ஜலம் ஊற ஆரம்பித்து விட்டது. அம்மாவிடம் வந்தான்!

News image
Updated On :30 ஆகஸ்ட் 2019, 6:30 pm

எஸ்.திருமலை

யசோதா ஒரு மிகப் பெரிய பானையில் மத்தைப் போட்டுத் தயிரைக் கடைந்து கொண்டிருந்தாள்.  உர்ர்...உர்ர்... என்று சத்தம் வந்தது! கிருஷ்ணனுக்கு நாக்கில் ஜலம் ஊற ஆரம்பித்து விட்டது. அம்மாவிடம் வந்தான்!

""அம்மா!.... இது என்ன ஓசை?'' என்று கேட்டான் ஒன்றும் தெரியாததைப் போல! 
யசோதை, ""பானைக்குள்ளே பூதம் இருக்கு கண்ணா!.... உன்னைப் பிடிச்சுக்கும்!.... வெளியிலே ஓடிப் போய்விடு!'' என்றாள்.

""அம்மா!.... பொய் சொல்றியே,... இதுக்குள்ளே நிஜமாவே பூதம் இருக்கா?''

""நிஜம்மாத்தாண்டா கண்ணா!.... போய்விடு!.... அது உன்னைப் பிடிச்சுக்கும்!'' 
""பூதம் உன்னைப் பிடிக்காதா?''

""நான் பெரியவள்!.... என்னைப் பிடிக்காது!.... நீ சின்னக் குழந்தையில்லையா?.... 
உன்னைப் பிடித்துக் கொள்ளும்!'

""ம்ஹூம்!.... நான் நம்ப மாட்டேன்!... நீ சொல்வது நன்றாயிருக்கா?.... என்னை வெளியே போகச் சொல்றியே!.... அந்த பூதம் உன்னைப் பிடித்துக்கொண்டால் என்ன செய்வது?.... அம்மாவைக் காக்க முடியாதவன்னு என்னைச் சொல்வாங்களே!'' 

 ""குழந்தாய்!.... என்னை என்னடா செய்யச் சொல்றே?''

""இதை முதலிலேயே கேட்டிருக்கலாமில்லே?...''

""இப்போதான் சொல்லேன்!... உன் யோசனையை!''

""அம்மா உன் இரண்டு கைகளையும் பானைக்குள் விடு!.... அந்த பூதமாகிய வெண்ணெயை எடுத்து என்னிடம் கொடுத்தால் நான் அதை விழுங்கி விடுகிறேன்!...'' என்றான் கிருஷ்ணன்!

யசோதை திகைத்து நின்றாள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.