தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தமிழர் திருநாள்!

ஆண்டு முழுவதும் வயல்காட்டில்அல்லும் பகலும் உழைத்தவர்கள்வேண்டி விளைத்த செல்வத்தை 

News image
Updated On :12 ஜனவரி 2019, 7:51 am

அ.கருப்பையா

ஆண்டு முழுவதும் வயல்காட்டில்
அல்லும் பகலும் உழைத்தவர்கள்
வேண்டி விளைத்த செல்வத்தை 
வீட்டில் கொணர்ந்து சேர்க்கின்றார்!

"போகி' என்றொரு நாள் குறித்து
பொலிவாய் சுற்றுப் புறம் யாவும் 
ஆகும் வண்ணம் பழமையினை 
அகற்றித் தூய்மை செய்கின்றார்!

தமிழர் திருநாள் பெயர்தாங்கி
"தை' மகள் பிறந்து வரும் நாளை
அமிழ்தம் பெற்று மகிழ்வது போல் 
ஆன்றோர் தந்தார் கொண்டாட!

இல்லம் தோறும் அழகு செய்து
எங்கும் மங்கலப் பொருள் வைத்து 
வெல்லமா, அரிசி, மணப்பொருளால்
வீதிகள் எல்லாம் பால் பொங்கல்!

பொங்கலைப் படைத்து எல்லோரும்
புத்துடை அணிந்து கூடி நின்று 
"செங்கதிர்' வணங்கி நன்றியினை
சிறப்பாய்க் கூறுவர் வாழ்த்தொலியாய்!

உழவுத் தொழிலைப் புரிவதற்கு
உற்ற துணை செயும் கால்நடைக்கும்
விழாவை அன்புடன் நடத்துவதே 
வீரம் செறிந்த பண்பாடாம்!

உள்ளம் கொள்ளை கொள்கின்ற 
"உலகப் பொதுமறை' தந்திட்ட 
"வள்ளுவர் தினத்' தைப் பெருமையுடன் 
வாழ்த்தி அரசும் கொண்டாடும்!

உண்டு உடுத்தி உரிமையுடன் 
உற்றார், உறவினர் நண்பர்களைக் 
கண்டுகளிக்கும் நாளினையே 
"காணும் பொங்கல்' என்பார்கள்!

மூன்று தினமும் திருநாளாம்!
முத்தமிழ் போற்றும் நன்னாளாம்! -இப் 
"பொங்கல்' என்னும் இந்நாளில் 
பொங்குக மகிழ்ச்சி எங்கெங்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.