

சக்தி தேவி உன்னையே
சரணம் என்று பணிகிறோம்!
பக்தி செய்யும் எம்மை நீ
பாது காக்க வேண்டுமே!
அன்னை உன்னைப் பணிவதால்
அதிக வளங்கள் கூடுமே!
உன்னை தினமும் வணங்கினால்
உறுதி மனதில் தோன்றுமே!
இச்சை ஞானக் கிரியை என
இவைதான் மூன்று சக்தியாம்!
மெச்சி உன்னைப் பாடினால்
மேன்மை வந்து கூடிடும்!
மன்னன் மகள் மலைமகள்!
மாதவர்க்கு அலைமகள்!
எண்ணும் எழுத்தும் வசப்பட
இனிது அருளும் கலைமகள்!
மூவரையும் போற்றிடும்
மூன்று, மூன்று நாட்களாம்!
நவராத்திரி நாட்களில்
நம்பித் தொழுது போற்றுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.